search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய குடிமக்கள் பதிவேடு"

    அசாம் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் தாம் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி தெளிவான பதிலளிக்கவில்லை என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #NRC
    புதுடெல்லி :

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    அதன் இறுதி வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து இந்திய அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இது குறித்து பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளதாவது :-

    சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படியே அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

    ஆனால், இதை செயல்படுத்தக்கூடாது என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடும் அவ்வாறாகவே உள்ளது. 

    வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமா? வேண்டாமா? எனும் கேள்வியை ராகுல் காந்தியிடம் கேட்டேன்.

    ஆனால், இதுவரை அவர் எனக்கு தெளிவான பதில் அளிக்கவில்லை. எனினும், இவ்விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

    காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சாமாஜ் கட்சிகளிடம், சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்காளதேசத்தினரை இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டுமா? அல்லது நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமா? எனும் கேள்வியை கேட்க விரும்புகிறேன். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    சமீபத்தில் வெளியிடப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் குடும்பத்தினர் பெயர்கள் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #AssamNRC
    புதுடெல்லி:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் வங்காளதேசத்தில் இருந்து பலர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்தது. இதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நேற்று தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.

    இந்த வரைவு பட்டியலில் சுமார் 40 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை கிளப்பியது. மேலும், இன்று கூடிய மாநிலங்களவையிலும் இவ்விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் பலரது பெயர்கள் பட்டியலில் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

    1974 முதல் 1977 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த பக்ருதீன் அலி அகமதுவின் சகோதர் எக்ராமுதீன் அலி அகமதுவின் மகன் ஸியாவுதீன் தனது பெயர் பட்டியலில் இல்லை என புகார் தெரிவித்துள்ளார். 

    1971-ம் ஆண்டுக்கு முன் அசாமுக்குள் வந்தவர்கள் தாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் என்பதற்கான ஆவணத்தை சமர்பிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் வெளிநாட்டவராக கருதப்படுவார்கள் என்பதன் அடிப்படையிலே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    ஆனால், முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினரின் பெயரே பட்டியலில் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியின் போதே, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் சிலர் தாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதற்காக சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    மேற்கண்ட விவகாரத்தை குறிப்பிட்டு டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜி, “முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் பெயரே பட்டியலில் இல்லாமல் போயுள்ளது. இதற்கு மேல் என்ன கூற இருக்கிறது?. 

    பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் அடையாளத்தை இழக்க நேரிடும் என்பதை நினைத்து பார்த்தீர்களா?. இந்தியா - பாகிஸ்தான் - வங்காளதேசம் எல்லாமே ஒன்றாக இருந்தது தான் என்பதை மறந்து விடாதீர்கள். 1971-க்கு முன்னர் வங்காளதேசத்தில் இருந்து வந்து குடியேறிய அனைவரும் இந்தியர்கள்தான்” என அவர் கூறினார்.
    ×